அண்மையில் பரவி வரும் பீகாரீஸ் போலி நியூஸ்.

அண்மையில் பரவி வரும் பீகாரீஸ் போலி நியூஸ்

தமிழ்நாட்டின் மீது அவதூறை கூறிவரும், வடநாட்டவர்களின் பிரச்சனை குறித்து சில தகவல்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயர் எடுத்த தமிழகத்தை மீது பொய்யான வீடியோக்கள் கொண்டு சிலர் பழி போட்டு க் கொண்டிருக்கின்றனர்.

பிரகாஷ் உமாராவ் தன் ட்விட்டரில் பரப்பி வந்து உள்ள பொய்யான வீடியோக்கள் மூலம் வடநாட்டவர்கள் தன் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் அவலம் .

ஏதோ தனிப்பட்ட விரோதத்தை வைத்து கொண்டு பொய்யான வீடியோக்கள் மூலம் அதாவது ரூமில் வடநாட்டவர்களை அடைத்து வைத்து அவர்களை கொல்லப் போவதாக கூறுவது போல் அவ் வீடியோ காட்சிகள் ட்விட்டரில் பரவி வருகிறது.

இதை பிரபல பத்திரிக்கையில் ஒன்றான ஹிந்துஸ்தான் டைம்ஸ் இவ்வாறு நடப்பதாக கூறுவது சர்ச்சைக்குள் உள்ளானது.

இதைத்தொடர்ந்து பிஹர் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் நிதிஷ்குமார் , முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசி உள்ளார்.

இதை தொடர்ந்து பீகாரில் எதிர்க்கட்சி கூட்டங்கள் இதை பூதாகரமாக மாற்றி கொண்டு வருகின்றனர். இரு மாநிலத்தில் இடையே உள்ள பிரச்சனையே மொழி தான். இதை சிலர் தவறான நோக்கத்தில் கொண்டு செல்கின்றனர்.