வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை இந்தியாவின் வங்காள விரிகுடாவில் பூங்கார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கையான மற்றும் பழமையான கடற்கரை ஆகும். இக்கடற்கரை காவேரி ஆற்றில் இருந்து  தொடங்கி வடக்கே நெய்தவாசல் வரை மூனு கிலோமீட்டர் நீண்டு செல்கிறது.

இந்த கடற்கரையின் மணல் 3 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து உள்ளது. சமீபத்தில் கடல் அரிப்பை தடுக்க கரையோரத்தில் கிரானைட் கற்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடற்கரை மற்றும் பூம்புகார் நகரம் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ் மாதம் சித்திரையில் வரும் முழு நிலவு அன்று கொண்டாடப்படும் சித்ரா பௌர்ணமி இக்கடற்கரைக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும். மேலும் தமிழ் மாதங்கள் ஆன தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசையில் காவேரி ஆற்றின் முகத்துவாரங்களில் மக்கள் புனித நீராடி மகிழ்கின்றனர்.

இந்த கடற்கரையில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறை இக்கடற்கரையின் அருகில் உள்ள நகரமாகும். சோழப் பேரரசரின் தலைநகராக இருந்த இந்த ஊருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு.

சோழர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுக நகரமாக இருந்த பூம்புங்காருக்கு தமிழ் இலக்கியத்தில் தனி இடமும் உண்டு. கண்ணகி பிறந்து வளர்ந்து கோவலுடன் சேர்ந்து வாழ்ந்த சிறப்பை சிலப்பதிகாரம் இந்த ஊரின் மூலமாகத்தான் சொல்லிச் செல்கிறது.

சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களை இப்போது பார்த்தாலும் கண்ணகி வாழ்ந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன. இன்னொரு முக்கியமான சிறப்பு காவிரி இங்குதான் கடலில் சங்கமிக்கிறது.

Comments are closed.