30 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய முக்கியமான விஷயங்கள்

சொந்தக்காலில் நில் அப்பா ,அம்மா ,அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி நிற்காமல், உங்கள் சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வதே ஓர் பெரிய கௌரவம் தான்.

உலகம் சுற்றும் வாலிபன் குறைந்தபட்சம் சிங்கப்பூர், மலேசியா வாவது சென்று வந்து விட வேண்டும். புது இடம் புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.

பேரார்வம் பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது ஆரம்பத்தில் வேலை வேண்டும் என்பதற்காக எந்த வேலையில் வேண்டுமானாலும் சேர்ந்து இருக்கலாம். ஆனால் 30 வயதுக்குள்ளாவது உங்களுக்குப் பிடித்த துறை /தொழில் வேலையில் சேர்ந்து விட வேண்டும் .

தோல்வி தோல்வியின் பொழுது கற்காத பாடத்தை நீங்கள் வேறு எங்கும் கற்று விட முடியாது.தோல்வி உங்களை ‘ஒழுங்குபடுத்தும் ஆசான்’. ஓர் தோல்வி யாவது நீங்கள் சந்தித்த விட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிர்க்கும் நிலை ஏற்படலாம்.

முதலீடு சம்பாதித்த பணத்தை வருமானம் ஈட்டும் வகையில் ஏதாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்கவேண்டும்.

உண்மையான நட்பு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும்,உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஒரு தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தோழமையை அமைத்துக் கொள்ள வேண்டும் .

பிடிக்காவிடில் பிரிவு ஒரு நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா? சுற்றதிர்க்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? வேண்டவே வேண்டாம் .முற்றிலுமாக பிரிந்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு இனி நீங்களே பயணம் செய்வது தான் வாழ்க்கை.

படிப்பில் உயரம் உங்கள் துறை சார்ந்த படிப்பில் முழுமை அடைந்து இருக்கவேண்டும். பி.எச். டி முடித்தால் முழுமை என்றில்லை.இன்றைய அப்டேட் என்னவென்று அறிந்து வைத்து இருந்தாலே போதுமானது.