உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்

நம் உடலில் இருக்கும் பாகங்களில் பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். உடலின் மொத்த எடையையும் தாங்குவது இந்த பாதங்கள் தான். நமது பாதங்களை இதுபோல சரியான முறையில் மசாஜ் செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

அதிலும் இது போன்ற மசாஜ்ஜால் நரம்புகள் தூண்டப்படும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இதுபோல பாதங்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

மேலும் இதற்கு ஆயுர்வேத மசாஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நாம் சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யும் போது இதயம், நுரையீரல் போன்றவை பலப்படும். கழுத்து, தலைவலி, உடல் அசதி போன்றவற்றில் இருந்து நமக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

நாம் இரவில் வெது வெதுப்பான நீரில் நம் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும் பிறகு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி நம் கால்களை மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இரவில் தூக்கம் நன்றாக வரும்.

நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டும். பாதத்தின் நுனிப் பகுதியில் இதுபோல மசாஜ் செய்தால் நம் உடல் மிகவும் புத்துணர்ச்சியை உணரும். பதற்றம், மன அழுத்தம் போன்றவையும் வெகுவாக குறையும்.

அது மட்டுமில்லாமல் சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் பல அசௌகரியங்களை உணர்வார்கள். அது அவர்களுக்கு ஒரு வித மன அழுத்தம் கொடுத்து கோபப்பட்டு, எரிச்சலாக கத்துவார்கள்.

அந்த காலகட்டத்தில் அவர்களின் தங்களுடைய பாதத்தின் கட்டை விரலை நன்றாக அழுத்தி மசாஜ் செய்தால் கோபம் குறைந்து ஒரு அமைதியான மனநிலை ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு கால்வலி இருக்கும். இந்த சமயத்தில் மெதுவாக பாதங்களை மசாஜ் செய்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் வேலைக்கு செல்லும் ஆண், பெண் பலரும் தலைவலி, கழுத்து, தோள்பட்டை போன்ற வலியால் அவதிப்படுவார்கள். இந்த பாத மசாஜ் சிறந்த பலனை கொடுக்கும்.

அவர்கள் தங்கள் கால் மேல் பகுதியிலும், உள்பகுதியிலும் சிறிது அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வந்தால் மேற்கண்ட அனைத்து வலிகளும் நீங்கி ஒரு புது உற்சாகம் பிறக்கும்.